Tags :காலச்சக்கரம் நரசிம்மா

தொடர்

பத்துமலை பந்தம் | 42 | காலச்சக்கரம் நரசிம்மா

42. கடைசி வாய்ப்பு மூங்கில் மரத்தில் கனிஷ்கா ஊசலாடிக் கொண்டிருந்தாள்..! “மயூரி… என்னைக் காப்பாத்து..! ஐ பீல் கிட்டி..! விழுந்துடுவேன் போல இருக்கு..!” –கதறிக்கொண்டிருந்தாள் கனிஷ்கா. “கனிஷ்கா ஏன் மரத்து மேல ஏறினா..?” –திகைத்தாள் மயூரி.! “அவள் ஏறலை..! அவள் செய்த பாவங்கள் அப்படியே ஓங்கி வளர்ந்து அவளை அந்த நிலைக்குக் கொண்டு போயிடுச்சு..!” –புன்னகைத்தான் குகன்மணி. “என்ன சொல்றீங்க..? எனக்குப் புரியலை..” “அவள் தொங்கிகிட்டு இருக்கிறது, Bambusoideae- னு மலேசியா மலைகள்ல விளையற மூங்கில் மரம். […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 41 | காலச்சக்கரம் நரசிம்மா

41. திரிசங்கு சொர்க்கம் மலையுச்சியில் கனிஷ்கா அரங்கேற்றியிருந்த பயங்கரத்துக்குச் சாட்சியாக தலைகுனிந்து மூங்கில் மரங்கள் அமைதியுடன் நிற்க, அவற்றின் மலர்களில் இருந்து பனித்துளிகள் வழிய, அந்த மரங்கள் மௌனமாக மிதுனுக்குக் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திக்கொண்டிருந்தன. விசாரணைக்கு வரும் போலீஸ் அதிகாரியைப் போன்று, மெதுவாக எட்டிப் பார்த்தான் சூரியன். சூரிய கிரணங்கள் போகர் பள்ளியின் வாயில் வழியாக குகைக்குள் எட்டிப்பார்த்து, இன்னமும் மூன்றாவது நவபாஷாணச் சிலையின் முன்பாக தியானத்தில் இருந்த மயூரியைத் தட்டி எழுப்பியது. ‘இப்படியும் ஒரு பக்தியா?’ […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 40 | காலச்சக்கரம் நரசிம்மா

40. உயரே உயரே… என் உயிரே உயிரே..! மலைச்சரிவில் இருந்த போகர் பள்ளியினுள் நுழையும் வரையில், மயூரி தனது கண்களைத் திறக்கவில்லை. மறந்து போய்க் கீழே நோக்கினால், அச்சத்தினாலேயே தான் தொற்றிக்கொண்டிருக்கும் குகன்மணியின் தோளில் இருந்து நழுவி விடுவோம் என்கிற எண்ணத்தில், அவனது தோளில் புதைந்திருந்த தனது முகத்தை அவள் உயர்த்தவேயில்லை. அவன் பத்திரமாக தன்னைக் கொண்டு சேர்ப்பான் என்கிற நம்பிக்கையுடன், தான் வழிபடும் முருகன் தன்னைக் கைவிட மாட்டான் என்று உறுதியாக நம்பினாள். மலைச்சரிவில் அந்த […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 39 | காலச்சக்கரம் நரசிம்மா

39. போகர் பள்ளி..! போகர் சாலை ! தற்போது இந்த பகுதியின் பெயர் போன்சாய் ! குனோங் தஹான் மலைப்பாதையில் ஆறாவதாக வரும் பகுதி.. காலை பொழுதில் கதிரவன் வானத்தில் ஏறுமுகமாக இருந்தாலும், அவனது கிரணங்கள் க உள்ளே புகாதபடி அடர்ந்த மரங்கள் பந்தல் அமைந்திருந்தன. இதனால் பகல் வேளையிலும் அங்கே இருள் பரவியிருக்க, ‘ங்கோயிங் ‘ என்கிற காட்டு பூச்சிகளின் இரைச்சல் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பறவைகளும் அவ்வப்போது கூவி, அதை பகல் பொழுது என்று […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 38 | காலச்சக்கரம் நரசிம்மா

38. தகான் மலை உச்சியில்..! பகாங் மாகாணத்தில் டாமன் நெகாரா தேசியப் பூங்கா ! Steep Slopes resort-இல் தான் மிதுன்ரெட்டிக்கும், கனிஷ்காவுக்கும் காட்டேஜ் ஒதுக்கப்பட்டிருந்தது. மலைச்சரிவில் ஆங்காங்கே அமைக்கபட்டிருந்தன காட்டேஜ்கள். இரவு வந்ததும், காட்டேஜ்களில் பொருத்தப்பட்டிருந்த லாண்டர்ன்கள் இருள் சூழ்ந்த மலைச்சரிவுகளில், சிதறியிருந்த விளக்குகள் பொருத்தப்பட்ட காட்ஜெகள், மலைமகள் அணிந்திருந்த ஹாரம் போல மின்ன, அதை ஜன்னல் வழியாக ரசித்தபடி நீண்டிருந்தான் மிதுன். அவன் அருகில் நின்றிருந்த கனிஷ்கா, அந்தக் காட்சிகளை ரசிக்கும் மனநிலையில் இல்லை. […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 37 | காலச்சக்கரம் நரசிம்மா

37. வாராய் நீ வாராய் மூன்றாவது நவபாஷாணச் சிலையை குகன்மணிதான் தனது பொறுப்பில் வைத்திருக்கிறான். குனுங் தகான் மலைக்கு மயூரியை அழைத்துச்சென்று அவளுக்கு அந்த சிலையைக் காட்ட போகிறான் ? எதற்காக அவள் மீது அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறான்..? காரணம், அவனது இதயத்தில் அவள் மீது நாட்டம் கொண்டிருக்கிறான். மலேசியாவின் சைனா டவுன் பகுதியில் இவ்வளவு பெரிய எஸ்டேட்டின் உரிமையாளர், எதற்காக மயூரியை பிடித்துக் கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறான்..? அவளைவிட, கவர்ச்சியும், புகழையும் கொண்டிருக்கும் இவளைத்தானே நாட […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 36 | காலச்சக்கரம் நரசிம்மா

36. ரகசியம் தெரிந்தது! பத்து எஸ்டேட்டின் அடர்ந்த மரங்களை ஊடுருவி அதன் நிலப்பகுதியில் தனது ஆளுமையைச் செய்ய இயலாத காலைக் கதிரவன், கோபத்தில், அந்தப் பிரம்மாண்ட மாளிகையின் மொட்டை மாடியைத் தகித்துக் கொண்டிருந்தான். ஆனால் சுள்ளென்று அடித்த அந்த வெய்யிலை இலட்சியம் செய்யாமல், குகன் மணி சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்தான். இடுப்பில் கரிய நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்தான். மற்றபடி, அவனது தேகம் ஒரு மலைக்குன்றைப் போன்று வெயிலில் சுழன்றாட, அதன் உச்சியில் இருந்து பாயும் அருவிகளைப் போன்று, […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 35 | காலச்சக்கரம் நரசிம்மா

35. இக்கரைக்கு அக்கரை பச்சை குகன் மணி எஸ்டேட் போர்டிகோவில் கேப் வந்து நிற்க, கனிஷ்காவுடன் இறங்கினாள், மயூரி ! சைனா டவுன் மலைச் சாலையில் இருந்து, பத்து எஸ்டேட் Batu Estate, என்று தமிழிலும், ஆங்கிலத்திலும், மலாய் மொழியிலும், சீன மொழியிலும் வடிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையைத் தாங்கி நின்ற அந்த நுழை வளையத்தினுள் நுழைந்து பாதையில் வண்டி இறங்க தொடங்கியதுமே, கனிஷ்காவின் புருவங்கள் உயர்ந்தன. “பியூட்டிபுல்..! எவ்வளவு அழகா இருக்கு..!” —என்று வழியெங்கிலும், செயற்கை அருவிகள், குளங்கள், […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 34 | காலச்சக்கரம் நரசிம்மா

34. ஆபத்துக்கு அடைக்கலம் கோலாலம்பூர் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்து, பார்க்கிங் ஏரியாவில் நின்ற கேப்-பில் இருந்து இறங்கிய மயூரி, ரிசப்ஷனுக்கு விரைந்தாள். சோபா ஒன்றில் அமர்ந்தபடி அவளுக்காகக் காத்திருந்தாள், கனிஷ்கா. “ஹாய் மயூரி..!” –என்றபடி எழுந்து நின்ற கனிஷ்கா அவளைத் தாவி அணைத்துக்கொண்டு முகத்தை அவளது தோளினில் புதைத்துக் கொண்டாள். மயூரியின் தோள்கள் தாமரையைப் போன்று விரிந்து, விலாப் பகுதியில் குறுகி, மீண்டும் இடையில் சற்றே விரிந்து, பாதங்களை நோக்கி மீண்டும் குறுகி, வளைவு நெளிவுகளோடு காணப்படும். […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 33 | காலச்சக்கரம் நரசிம்மா

33. பயணம் போனார்கள்..! பணயம் ஆனார்கள்..! பாத்டப்பின் ஹாண்ட் ஷவரில் இருந்து தண்ணீர் ‘சள சள’ என்று வெளியேறிக் கொண்டிருக்க, அதனை உணராமல் கண்ணாடியைப் பார்த்தபடி திகைத்து நின்றிருந்தாள் கனிஷ்கா. இவள் குளித்துக் கொண்டிருப்பது அபிக்கு எப்படித் தெரிய வந்தது..? பாத்ரூமில் கேமரா எதாவது வைத்திருக்கிறார்களா..? மருட்சியுடன் கண்களைச் சுற்றிலும் மேய விட்டாள். டெலிபோன் இணைப்பு எண்ணை வைத்து அபி இவள் பாத்ரூமில் இருப்பதை யூகித்திருக்கலாம். அப்பா சரவணப்பெருமாள், அவர்கள் பயங்கரமானவர்கள் என்று சொல்லித்தான் அனுப்பியிருநதார் என்றாலும், […]Read More