Tags :ஆன்மீக மர்மத் தொடர்

தொடர்

அஷ்ட நாகன் – 15| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- பாம்புகளில் மிகப்பெரிய பாம்பாக தற்போது ‘அனகோண்டா’ என்று கூறப்படுகிறது.அதைப்போல, படமெடுத்த ஆடும் நாகங்களில் ‘ராஜ நாகம்’ மிகப்பெரிய நாகமாக கருதப்படுகிறது.நாம் ஏற்கனவே பாம்பிற்கும்,நாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தோம்.படமெடுத்து ஆடுபவை ‘நாகங்கள்’ ஆகும்.படமெடுக்க இயலாதவை பாம்புகள் ஆகும்.நாகங்களில் நல்ல பாம்பு,ராஜ நாகம் மற்றும் கருநாகம் ஆகிய மூன்று வகை நாகங்கள் தெய்வீக சக்தி வாய்ந்த நாகங்களாக கருதி வழிபட்டு வரப்படுகின்றன.இந்து மதத்தில் நல்ல பாம்பை பெருந்தெய்வ வழிபாட்டில் பல தெய்வங்களுடன் இணைத்து வணங்குகின்றனர்.கரு நாகத்தை சிறு […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 33 | காலச்சக்கரம் நரசிம்மா

33. பயணம் போனார்கள்..! பணயம் ஆனார்கள்..! பாத்டப்பின் ஹாண்ட் ஷவரில் இருந்து தண்ணீர் ‘சள சள’ என்று வெளியேறிக் கொண்டிருக்க, அதனை உணராமல் கண்ணாடியைப் பார்த்தபடி திகைத்து நின்றிருந்தாள் கனிஷ்கா. இவள் குளித்துக் கொண்டிருப்பது அபிக்கு எப்படித் தெரிய வந்தது..? பாத்ரூமில் கேமரா எதாவது வைத்திருக்கிறார்களா..? மருட்சியுடன் கண்களைச் சுற்றிலும் மேய விட்டாள். டெலிபோன் இணைப்பு எண்ணை வைத்து அபி இவள் பாத்ரூமில் இருப்பதை யூகித்திருக்கலாம். அப்பா சரவணப்பெருமாள், அவர்கள் பயங்கரமானவர்கள் என்று சொல்லித்தான் அனுப்பியிருநதார் என்றாலும், […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 32 | காலச்சக்கரம் நரசிம்மா

32. நாலு பக்கம் ஏரி..! ஏரியில தீவு..! மயூரி அந்த ஒற்றையடிப் பாதையில் தொடர்ந்து நடந்தாள். சற்றுத் தொலைவில் குமுதினியும், குனோங்கும் பின்தொடர குகன்மணி அந்தப் பாதையில் விரைந்து கொண்டிருந்தான். தொலைவில் இருந்த சிறு குன்றின் உச்சியில், விண்ணில் மிதந்து வந்த ஒளிவட்டங்கள் இறங்கியதன் அடையாளமாக ஒருவித ஒளி பரவியிருந்தது. குகன்மணிக்கும் அவற்றிற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்..? குமுதினி, குனோங் இருவரையும் அழைத்து கொண்டு, இந்த இரவு வேளையில் எங்கே அவசரமாக செல்கிறான்..? சிறிது தொலைவே […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 14| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- திருநாகேஸ்வரம், கீழ்பெரும் பள்ளம்,திருப்பாம்புரம், நாக ராஜா கோயில் மற்றும் சங்கரன் கோவில் என்று நாகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போற்றும் வகையில் பல கோயில்கள் நம் தமிழகத்தில் இருந்தாலும் இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நயினார் தீவில் உள்ள “நாக பூசணி அம்மன் கோயில்” நாகர்களுக்கான அதி சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது.இந்த கோயில் எவ்வளவு பழமையானது என்று யாராலும் வரையறுத்து சரியாக கூற முடியவில்லை.ஆனால், இக்கோயில் நாகர்களுக்கான மிக முக்கியமான கோயிலாக கருதி வழிபட்டு வரப்படுகிறது. […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 13| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- புராண, இதிகாசங்களில் நாகங்களைப் பற்றி ஆங்காங்கே சில செய்திகள் காணப்படுகின்றன. நாகங்களைப் பற்றி சில அரிய செய்திகள் நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.அதர்வண வேதத்தில், நாகங்களினால் ஏற்படும் கெடுதல்களுக்கும், காயங்களுக்கும் தடுப்பு முறையாகப் பல அரிய மந்திர, ஔஷத(மருத்துவ) குறிப்புகள் காண கிடைக்கின்றன. இவ்வகையான மந்திரம் மற்றும் மருத்துவ முறைகளை தகுந்த நபரின் மூலம் நேரடியாக கற்றுக் கொண்ட பின்னரே செயல்படுத்திப் பார்க்க வேண்டும்.நாகத்தின் விஷமானது சேகரித்து சுத்திகரிக்கப்பட்ட பின்னர், தோல் […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 30 | காலச்சக்கரம் நரசிம்மா

30. விமானப்படிகளில் விபரீத செய்தி  “தகையோன்-னா தகுதி உடையவன். தகுதி உடையவர்களால மட்டுமே ஏற முடிஞ்ச மலை..! இப்ப அந்த மலையோட பெயர் என்ன தெரியுமா..?” –குகன்மணி கேட்க, மயூரி ஆவலுடன் அவன்  முகத்தைப் பார்த்தாள். மலேசியா ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிவதால், மலேசியாவின் முக்கிய இடங்களைப் பற்றி அறிந்திருந்தாளே தவிர அதன் இயற்கை மர்மங்களைப் பற்றி இதுவரை ஒன்றும் அறிந்திருக்கவில்லை.  “இப்ப அந்த மலைக்கு குனுங் தகான்-னு பெயர். குனுங்-னா மலை. மலேசியாவோட உயரமான மலை. மலை முழுக்க அடர்ந்த […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 12| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாகங்கள் குறித்து பல வகையான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் ‘ராகு-கேது’ என்கிற இரண்டு கிரகங்களின் இருப்பை வைத்தே அவரின் வாழ்க்கை அமைப்பை கணித்து விடலாம்.திருமணமான ஒரு பெண்ணுக்கு விரைந்து குழந்தை பிறக்க நாக வழிபாடு துணைபுரிகிறது. திருமணமான பெண்கள் ‘அரச மரத்துடன் வேப்ப மரம்’ பின்னி பிணைந்திருக்கும் இடத்தை தினமும் 21 சுற்றுகள் வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சுற்றி வர மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும்.அதுமட்டுமின்றி, அரசும் வேம்பும் […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 29 | காலச்சக்கரம் நரசிம்மா

29. நாலும் தெரிந்த நாயகன்  “கெலவர் குகை என்றால் வௌவால் குகையாமே..! அங்கே என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது..?” –யோசனையுடன் நடந்தாள், மயூரி. “நமக்கு , எல்லாம் தெரியும்னு இறுமாந்து உலகமே நம்ம பாக்கெட் உள்ளேன்னு நினைச்சுகிட்டு இருக்கோம் . இந்த பத்து மலை எல்லாம் நாற்பது கோடி ஆண்டுகள் பழமையானது. பத்து-னா மலயா மொழியில சுண்ணாம்பு னு சொல்லியிருக்கேன். இந்த சுண்ணாம்புக்குப் பின்னாடி எவ்வளவோ விஷயங்கள் இருக்கு தெரியுமா ? அகஸ்தியர்,போகர், கோரக்கர், எல்லாம் ஏன் இங்கே வந்து வாசம் செய்தாங்க னு நினைக்கிறே..? அமைதியா […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 28 | காலச்சக்கரம் நரசிம்மா

28. மலையுச்சியில் வௌவால் மேடு பத்துமலை முருகனை மனங்குளிரத் தரிசித்தாள் மயூரி. மனதின் ஒரு மூலையில் கலக்கம் தோன்றிக்கொண்டிருந்தது. உலகில் இப்போதைக்கு இவள் தனிமைப்பட்டு நிற்கிறாள். மூன்றாவது நவபாஷாணச் சிலையை தேடத் தொடங்கியிருக்கும், தனது குடும்பத்தாரின் செயலுக்கு ஆதரவு தர மறுத்ததால், அவர்களாலேயே குறி வைக்கப்பட்டு இருக்கிறாள். நவபாஷாணச் சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை உட்கொண்டால், உடலில் ஆரோக்கியம் நிலவும் என்பது பொதுப்படையாக அனைவருக்கும் சொல்லப்பட்ட அறிவுரை. ஆனால் நவபாஷாணச் சிலையின் மகத்துவம் அதோடு நிற்கவில்லை […]Read More

கைத்தடி குட்டு தொடர்

பத்துமலை பந்தம் | 27 | காலசச்சக்கரம் நரசிம்ம

27. குகன்மணி ஓர் அபாய மணி அண்டர்வேர்ல்ட் மன்னன் அமீர் அனுப்பிய ஆட்கள், அலட்சியமாக மலேசியன் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்தபோது, ஜெனரல் மேனேஜர் நூர் பாசில் அதிர்ந்து போனார். அவசரமாக தனது அறையில் இருந்து வெளியேறி ரிசப்ஷன் பக்கமாக சென்று, அங்கு பொறுப்பில் இருந்த பமீலாவிடம் கண்ணசைத்தார். “ஜாக்கிரதை..! ஆமீர் ஆட்கள் வர்றாங்க. எதுக்கு வர்றாங்கன்னு தெரியலை..! . நல்லபடியாகப் பேசி அனுப்பு. ஹொட்டலையே வெடிகுண்டு வைத்து தகர்க்கக் கூடியவங்க. பாரிஸ் வெடிகுண்டுகளே இவர்களின் கையில் இருக்கு..!” […]Read More