Tags :சுபா

தொடர்

ஒற்றனின் காதலி | 12 | சுபா

பீஹாரில் நான் கொன்ற புத்திசுவாதீனமற்ற கணவன், தான் சாகப் போகிறோம் என்பதை உணராமலேயே, ஓர் உயர்ந்த கட்டிடத்தில் இருந்து, கடவுளிடம் சேர்வதற்காக நான் காட்டிய வழியான, குதித்தடைவது என்ற வழியைப் பின்பற்றிக் கீழே குதித்துச் செத்தான். சாவு என்பதையே உணராதவன். என் கைகளில் ரத்தக்கறை படியவில்லை. என் மேல் குற்றக்கறை படியவில்லை. போலீஸ், அவன் சித்தசுவாதீனமற்றவன் என்பதால் தற்கொலை செய்து கொண்டான் என்று ஃபைலை மூடிவிட்டது. ரத்தம் விரயமானதை நான் பார்க்கவே இல்லை. அவனுடைய படித்த மனைவி, […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 11 | சுபா

“ஏய்.” “……” “இதோடு பத்துமுறை கூப்பிட்டு விட்டேன். இந்த முறை நீ பதில் பேசாவிட்டால், நான் எழுந்து போய்விடுவேன்.” “ம்” என்றாள் உமா. நான், அவள் மடியில் தலைவைத்திருந்தேன். அவள், தன் இருகால்களையும் சோஃபாவில் இருந்து, கீழே தொங்க விட்டிருந்தாள். நான் கண்களை உயர்த்தி, அவளைப் பார்த்தேன். அவள் கண்கள் கலங்கி இருந்தன. “அழுகிறாயா என்ன?” என்று பதற்றப்பட்டுக் கொண்டு எழுந்து விட்டேன். “ம்.” “ஏன் உமா?” “என்னால் தாங்க முடியவில்லை சிவா.” “எது?” “இந்த ஒரு […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 10 | சுபா

அது ஒரு குகைப்பாதை. ஏழடி அகலம். ஏழடி உயரம். ஜெலட்டின் வெடிகளை வைத்துத் தகர்க்கப்பட்ட குகைப்பாதை. நீளமாக முடிவின்றிப் போய்க் கொண்டே இருந்தது. பாதையில் காலுக்குக் கீழே தண்டவாளம் ஒன்று ஓடியது. நாரே கேஜ் தண்டவாளம். தலைக்கு மேல் இரண்டு இரும்புக் குழாய்கள். நடக்க, நடக்க இரும்புக் குழாய்களும் நீண்டன. ஒரு குழாயில் காற்று. அழுத்தப்பட்ட காற்று. அந்தக் காற்று பாறைகளை ஓட்டை போடும் ட்ரில்லர் இயந்திரத்தை இயக்குவதற்குப் பயன்படுத்தலாம். மற்றபடி சுவாசிப்பதற்குப் பூமி மட்டத்திலிருந்து குளிரூட்டப்பட்ட […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 9 | சுபா

விஜி, தன் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களில் என்னை, வெகு சுலபமாகச் சேர்த்து விட்டான். என்னுடைய இயல்பான, கவர்ச்சியான, பெண்மை கலந்த சிரிப்பினால், சக தொழிலாளர்களைக் கவர்ந்து விட்டேன். தங்கபாண்டி, பீட்டர், மது, குமார், அபூபக்கர் எல்லோருமே என்னுடன் சகஜமாகப் பழகினார்கள். டீ சாப்பிட்டார்கள். சிகரெட் புகைத்தார்கள். சாராயம் குடித்தார்கள். என் சக தொழிலாளர்களிடம் எனக்குக் கொஞ்சம் செல்வாக்கு அதிகம் வேண்டும். நான் சுரங்கத்தில் விஜியை எப்படிக் கொல்வது என்று தீர்மானித்த பின், என் சக தொழிலாளர்கள் […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 8 | சுபா

நான் டாய்லெட்டிலிருந்து வெளியே வந்தேன். டிக்கெட் கிழிப்பவன் கூட அங்கே இல்லை. எல்லாம் கீழ்த்தள காபி, டீ, கேக், பிஸ்கட், சிகரெட் விற்பனையில் மும்முரமாக இருந்தார்கள். நான், உமாதேவியின் கைப்பற்றி, அவளை அழைத்து வந்து கீழே விழுந்து கிடந்தவனைக் காட்டினேன். அவள் மார்பை அழுத்திக் கொண்டாள். “இறந்து விட்டானா என்ன?” “இல்லை, சினிமா முடியும் வரை எழுந்திருக்க மாட்டான்” என்றேன். “யூ ஆர் கிரேட்.” “தியேட்டரில் இருட்டில் ஒரு முத்தத்துடன் சொல்” என்றேன். முதல் முறையாக நான் […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 7 | சுபா

எதற்கு வீணாக வளர்த்துக் கொண்டு? நான் போயிருந்த சமயம், அவள் கணவன் வெளியூர் போயிருந்தான். விஜயகுமார், நல்லவன். அதுதான், அவள் கணவன். அவளைக் காதலித்து மணந்தவன். ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸில் பதிவுத் திருமணம். தாலி எல்லாம் வேண்டாம். அது பெண்களுக்கு மூக்கணாங்கயிறு மாட்டுவது போல என்று சொல்லி, விஜயகுமார், தான் ஒரு முற்போக்கானவன் என்று, அவளிடம் காட்டிக் கொண்டிருக்கிறான். அவனும், உமாதேவியும் கணவன் – மனைவி என்பதற்கு அடையாளமாக மோதிரம் மட்டும் மாற்றிக் கொண்டால் போதும் என்று உமாதேவியைச் […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 6 | சுபா

நான் அயர்ந்து போனேன். எந்தப் பெண்ணைத் தேடி நான் தக்கலை தங்க வயல் முழுக்க, நாயாய், பேயாய் அலைந்து கொண்டிருந்தேனோ, அதே பெண் இப்போது கண்ணெதிரே. அவளைக் கண்டால், பொசுக்க வேண்டும். தொட்டால், நெறிக்க வேண்டும் என்ற உணர்வெல்லாம், ஓவர்ஹெட் டாங்க்கின், அடி ஓட்டையைத் திறந்தவுடன் வழியும் நீர்போல, அப்படியே வடிந்து விட்டது. அவள், என்னை ஏமாற்றுபவளாய் இருந்தால் மறுபடியும் இந்த இடத்திற்குத் தேடி வந்திருக்க மாட்டாளே! “வாருங்கள்” என்றேன், “உட்காருங்கள்” என்றேன். அவள் உட்கார முயன்ற […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 5 | சுபா

அடுத்த நாள் காலை. எழுந்தேன். குளித்தேன். சாப்பிட்டேன். நெற்றியில் விபூதி, ப்ளஸ் சந்தனப் பொட்டு சகிதம் அறையிலேயே அடைந்திருந்தேன். நல்ல பிள்ளை தோற்றம். பொழுதைப் போக்கக் கையில் ஒரு நாவல் புத்தகத்தை வைத்திருந்தேன். எந்த ஒரு பெண்ணைப் பார்த்தாலும், அந்தப் பெண், இந்த மாதிரித்தான் என்று அவளுடைய குணாதிசயங்களைக் கணிக்கும் அபார ஆற்றல் எனக்கு உண்டு. அதன்படி அவள் நல்லவள். பிறரை வஞ்சிக்காதவள். நற்குடும்பத்தைச் சார்ந்தவள். பழக இனிமையானவள். சுலபத்தில் ஏமாறுபவள். என் வலையில் சிக்கக் கூடியவள். […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 4 | சுபா

அந்தப் பெண் வெள்ளை நிற ஸாரி அணிந்திருந்தாள். புடவை நெடுக வெளிர் ரோஸில் பூக்கள் சிந்தியிருந்தன. ரோஸ் நிறத்தில் ரவிக்கை. தலையில் ஓர மல்லிகைச் சரம். பின்னப்பட்ட பின்னல், பாம்பு போல் தொங்கிக் கொண்டிருந்தது. என் வரவால் சலனப்பட்டு, அவள் திரும்பிப் பார்த்தபோது, தெரிந்த அவள் முகம், என்னை ஒரு விநாடியில் சொர்க்கத்திற்குக் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டது. ஐந்து விரல்களையும் உபயோகப்படுத்தி, மெல்ல உயர்த்திப் பிடித்துக் கொஞ்சத் தோன்றும் மோவாய். சிவப்பான சின்ன அதரங்கள். நீளமான […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 3 | சுபா

நான் இரண்டாவது முறையாகத் தக்கலை வந்து சேர்ந்த போது, நான் இளைஞனாக மாறியிருந்தேன். என் இருபத்தாறு வயது முகத்தில் அடர்த்தியான மீசை என்பது பெண்களைப் பயமுறுத்தும். வயதைக் கூட்டிக் காட்டும் என்பதற்காக, மீசையைச் சுத்தமாக வழித்து விட்டேன். முன்பு வந்ததற்கும், இப்போது வந்ததற்கும் இடையில் ஒரு மாதம். முப்பது முழு நாட்கள். இந்த நாட்களில் நான், முகத்திற்குக் கிரீம் எல்லாம் தடவி ஒரு மாதிரி, பளபளப்பாக என் முகத்தை மாற்றி இருந்தேன். இப்போதைய ஸ்டைலில் பின்னந்தலை முடியை […]Read More