இன்றைய ராசி பலன்கள் ( 24 பிப்ரவரி சனிக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 24ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

சோபகிருது வருடம் மாசி மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 24.02.2024, சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.51 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை. இன்று இரவு 11.05 வரை மகம். பின்பு பூரம். பூராடம் உத்தராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இன்று விநாயகர் வழிபாடு நன்று.

ரிஷப ராசி அன்பர்களே!

தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப் பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர் களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித் துச் செல்வது நல்லது. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக் கையுடன் இருக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். இன்று அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கடக ராசி அன்பர்களே!

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடி யும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனையும் அதிகரிக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நலம் உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். இன்று பைரவரை வழிபடுவது நன்று.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரி களால் அனுகூலம் உண்டு. அம்பிகையை வழிபடுவது நலம் சேர்க்கும்.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடிவது மகிழ்ச்சி தரும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். மற்றவர்களுக் குக் கொடுத்து வராமல் இருந்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவர வுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விநாயகரை வழிபடுவது நன்று.

விருச்சிக ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடு வீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். செரிமான பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரம் விறுவிறுப் பாக நடைபெறும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப் படுத்தும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. சிவபெரு மானை வழிபட சிரமங்கள் குறையும்.

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

மீனராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!