இதயத் துடிப்பை எகிறச் செய்யும் படம் பேட்டரி

 இதயத் துடிப்பை எகிறச் செய்யும் படம் பேட்டரி

மணிபாரதி இயக்கத்தில், ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி.

சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலிஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளை கண்டு பிடித்து, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார்.

தன் ஒரே மகளை கொலை செய்த கொலைக்காரனை தேடி அலையும் அசிஸ்டன்ட் கமிஷனராக விக்டர் வருகிறார். இந்த மூன்று கதா பாத்திரங்களையும் இணைத்து சொல்லப்பட்ட இப்படத்தின் திரைக்கதை, பார்வையாளர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்யும்.

கல்வியும், மருத்துவமும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. அதில் கற்று தேர்ந்தவர்கள், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியது போய், இன்று, அதை பணம் சம்பாதிக்கும் வியாபார தளமாக்கி விட்டனர். சூது கவ்வும் தர்மத்தை, அதனிடமிருந்து மீட்கும் க்ரைம் த்ரில்லர் படமே பேட்டரி.

பொதுவாக, க்ரைம் கதை என்றாலே எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இந்தப்படத்தில் வரும் திருப்பங்கள், ஒரு புதிர் விளையாட்டுப் போல, ஏன்? எதற்கு? எப்படி? என்கிற ஆர்வத்தை தூண்டும் படியாக இருக்கும்.

கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் கன்னட நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி அறிமுகமாகிறார். மற்றும் யோக் ஜப்பி, எம். எஸ். பாஸ்கர், நாகேந்திர பிரசாத், அபிஷேக், ராஜ்குமார், ஜார்ஜ் மரியம், கிருஷ்ணகுமார், ரமா, பேபி மோனிகா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பு ராஜேஷ்குமார், கலை சிவா யாதவ், திரைக்கதை- வசனம் ரவிவர்மா பச்சையப்பன், ஒளிப்பதிவு கே.ஜி. வெங்கடேஷ், இசை சித்தார்த் விபின், கதை- இயக்கம் மணிபாரதி, தயாரிப்பு சி. மாதையன்.

இப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.

கமலகண்ணன்

1 Comment

  • மிக சிறப்பான விமர்சனம்

Leave a Reply to K Asokan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...